Wednesday, October 29, 2014

வெளிவராத கவிதைகள் - 1

மழை பற்றி மேலும் ஒரு கவிதை

எல்லா மண்ணிலும்
மழையை பற்றிய ஒரு
வாசனை உண்டு 

எல்லா கவிஞர்களிடமும் 
மழையை பற்றிய ஒரு 
கவிதை உண்டு 

எல்லா மழையிலும் ஊரின்
வாசனை இல்லை 

எல்லா மழையும் கவிதை இல்லை !!

காலச்சக்கரம்

இன்றை நேற்றாக
நேற்றை நாளையாக
வைத்திருக்கும் குழந்தைகளிடம் நாளை நாளையாக விரும்புவதில்லை !!

சிலுவைப்பாடு

விருப்பமில்லாத
களத்தில் இருப்புகொள்ளும் ஒவ்வொரு கணமும் புரிகிறது சிலுவைப்பாடு !

நான் இல்லாத நான்


புன்முறுவல்கள்
கைகுலுக்குதல்கள்
கட்டிப்பிடித்தல்கள்
பாராட்டுதல்கள்
பேச்சுவார்த்தைகள்
கைதட்டல்கள்
மட்டுமின்றி
தாழிடப்பட்ட இந்த 
அறைகளுக்குள்ளும்
இல்லை நானும் 
என் இந்த கவிதையும் !! 

 

No comments:

Post a Comment