Friday, July 18, 2014

முன் ஜென்ம காதல்

1980 - மதுரை 

வேலை வாய்ப்புகள் அவ்வளாக இல்லாத நகரம் வாடகை பணத்தை கொண்டும் அண்ணனின் உதவியோடும் ஒரே மகன் ஜெயக்குமாரோடு வாழ்ந்து வந்தாள் செல்லம்மாள், ஜெயக்குமார் முரடன் இவனுக்கு தருமன் என நண்பன் ஒருவன் உண்டு இவர்கள்தான் இந்த ஊரின் மொத்த சண்டியர்தனங்களுக்குன் குத்தகைதார்கள், அந்த ஊரின் ஊராட்சி தலைவர் மகள் சுவாதி தொத்துப்பல் பேரழகி ஜெயக்குமாருக்கும் சுவாதிக்கும் எல்லோரையும் போலவே வேதியல் தூண்டப்பட்டு கண்கள் இரண்டில் கட்டி இழுத்து வண்ணச்சிரிப்பில் இரவும் அல்லாது பகலும் அல்லாது பொழுதுகள் எப்போதும் வளர்ந்தது காதல்... சுவாதியின் சித்தப்பா கணகு விரித்த சூழ்ச்சியில் வைக்கப்பட்ட பொறி எனத்தெரியாமல் அவரின் அரசியல் ஆதாயத்திற்காக கொலை செய்யகிறார்கள் ஜெயக்குமாரும் தருமனும்.... பின்னர் அவன் வைத்த பொறியை உணர்ந்து கணகை கொலை செய்ய முயல்கயில் ஜெயக்குமார் கொல்லபடுகிறான் தருமன் அவனது சித்தப்பாவை கொலை செய்து பின்னர் சுவாதியின் அப்பாவால் கொலையாகிறான் காதலனை இழந்து விட்ட விரக்தியில் சுவாதியும் தற்கொலை செய்து இறந்து விடுகிறாள்.

2013 - சென்னை

ஜெயக்குமார் தனது அடுத்த ஜென்மத்தை சென்னையில் தொடங்கிருந்தான் நண்பன் தருமனோடு இங்கே இப்போது சரக்கடித்து சைட்டடித்து சண்டைகளுக்கு பயந்த சராசரி இளைஞர்களாக வாழ்ந்து வந்தனர்
முன் ஜென்ம நினைவில்லாமலே சுவாதியை சந்தித்து காதலும் கொள்கிறான் அவளும் அவ்வாறே செய்கிறாள் இந்த முறையும் அவர்கள் காதலுக்கு வில்லனாக அவளின் அண்ணனே இருக்கிறான் ஆனால் அவன் விரித்த வலையில் தெரியாமல் தான் சிக்குகிறான் ஜெயக்குமார் இந்தமுறை பொறியில் மாட்டிய வலியில் ஆத்திரப்படாமல் நிதானமாக அத்தனை சூழ்ச்சி முடிச்சை அவிழ்த்து சரியாக வெளியேறுகிறான் அவனது நண்பனுடன் கடைசியாக ஜெயக்குமார் சுவாதி அவர்களின் முன் ஜென்ம காதலையும் அறியாமலே வாழ்கையில் இணைகிறார்கள்
அம்புட்டுதான் கதை முடிஞ்சது 

நீதி -

இது எதோ ஒரு உண்மைகதைன்னு நீங்க நெனச்சா இன்னும் எத்தன ஜென்மம் எடுத்தாலும் தமிழ்சினிமாவ காப்பாத்த முடியாது ://

மொத கதைய சுப்பரமணியபுரத்திலும்
ரெண்டாவது கதைய வடகறி  
படத்திலையும் பொருத்தி உஸ்ஸ்ஸ்னு பெரு மூச்சு விட்டா நீயும் நல்ல சினிமா ரசிகனே - ஈஈஈ _/\_


No comments:

Post a Comment