Friday, August 1, 2014

கரதவம்



விரித்தகைகளில் நிரம்பியிருக்கும்
காற்றுக்கு முன்னிருந்தே
தவமிருக்கிறது காதலும்காமமும்
உச்சிதொடங்கி கன்னம் இதழ்
கண்ணீர்வரை சாய்த்துக்கொள்ளும்
ஏக்கத்துடன் காதலும்
சருமம்தொடங்கி தசை நரம்பு
எலும்புவரை இறுகிக்கொள்ளும்
ஏக்கத்துடன் காமமும்
செய்துவரும் இக்கடும்தவம்
மோட்சம் பெரும்
இறுகியகைகளில் வெற்றிடமின்றி
நீ நிரம்பியிருக்கும் வரம்
கிடைத்த நாளொன்றில் !! 

No comments:

Post a Comment