Wednesday, August 6, 2014

மீட்சி

பிணைந்த இதழ்களில் 
உமிழ்நீரை பரிமாறத்தொடங்கிய 
போது துவங்கியது அந்த 
கண்ணாமூச்சியாட்டம்  
அடித்தோலின் சுரப்பிகள் 
வழிய அங்கிங்கு போக்கிட்டு 
அலைகழித்து நீண்டது ஆட்டம் 
ரெட்டைநாக்குகள் மார்பெல்லாம் 
ஊர்ந்து கரும் திராட்சைகளை 
துழாவி ருசித்திருந்த போது 
அடிவானத்துக்கு அப்பால் 
தொலைந்தே போயிருந்தது
பின் மயிர்காடுகளினூடாக 
மறுமுனை நோக்கி  
யோனியின் கடலை கடந்த 
பெரும் யுகங்களுக்குப்பின்
காமத்தின் மெல்லிய 
வெண்ணிறத்துகள்களால்  
மீட்டெடுக்கப்பட்டது 
நான் எனும் பிரக்ஞை !!

  

No comments:

Post a Comment