தண்ணீர்க்குழாய்,வீதி,வீடு,சுடுகாடு,
கண்ணீர்,காதல் என எதுவும் இங்கு
சமமில்லை..
சமன்படுத்த விழைவது
இளவரசனெனில் கழுத்தை முறித்து
தண்டவாளங்களில் வீசியெறியும்..
இளவரசியெனில் கற்பை முறித்து
ஊர்க்கோடி மரக்கிளையில்
தூக்கிலிட்டு தொங்கவிடும்..
தீண்டுமை ஒரு பாவச்செயல்
தீண்டுமை ஒரு பெருங்குற்றம்
தீண்டுமை ஒரு மனிததன்மையற்றசெயல்
என எப்போதும் போல
ஆதிக்கங்களின் வழியே வாழிய
எங்கள் தேசம் வாழியவே...
ஈச்வர அல்லா தேரே நாம்
சப்கோ ஷன்மதி தே பகவான் கீதம்
இசைக்கவே..
பட்டொளி வீசி மூ”வர்ண”க்கொடி
பறக்கவே...
ஜனித்து ஜீவித்த இடத்திலேயே
நீங்கள் அகதிகளாக்கிய பெடியன்களுக்கு
ஆரஞ்சுமிட்டாய்களை மட்டும்
வழக்கம்போல தருகவே...
வர்ணம் மாத்திரம் வந்தே மாதரம் !!
No comments:
Post a Comment