Friday, July 18, 2014

வருத்தங்களுக்குஅப்பால்


ஆடித்தள்ளுபடிகளில் கூட 
உடை வாங்கித்தராதவனென்று 
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று 
பண்டிகைநாட்களில் கூட 
பொருள் வாங்கித்தராதவனென்று 
சம்பளதினங்களில் கூட 
இனிப்பு வாங்கித்தராதவனென்று 
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு 
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!


No comments:

Post a Comment