ஆடித்தள்ளுபடிகளில் கூட
உடை வாங்கித்தராதவனென்று
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று
பண்டிகைநாட்களில் கூட
பொருள் வாங்கித்தராதவனென்று
சம்பளதினங்களில் கூட
இனிப்பு வாங்கித்தராதவனென்று
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!

No comments:
Post a Comment