Wednesday, June 29, 2016

சொற்கள்

கடவுளர்களால் முலாம் பூசப்பட்டு 
வந்து விழுந்த இந்த சொற்களை
பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவாக வேண்டுமோ
அதுவாக மாற்றிக்கொள்ளுங்கள்

இடத்திற்கேற்ப உருமாற்றி
உபயோகித்துக் கொள்ளுங்கள்

முடிந்தமட்டும் நிதானமாக கையாள வேண்டும் 
எனும் ஒரேயொரு கோரிக்கையை 
மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

ஒருவேளை நீங்கள் இந்த
சொற்களின் வெளிப்புறம்
கரையுமளவு கையாள நேர்ந்தால்
அதில் வெளிப்பட்டு விடக்கூடும்
கடவுள் எனும் பைசாசத்தின் மூர்க்கம்.

- கர்ணாசக்தி

No comments:

Post a Comment