Saturday, September 3, 2016

குற்றமே தண்டனை - ஓர் தத்துவார்த்த விசாரணை




உலகப்புகழ் பெற்ற தத்துவார்த்த திரைப்படங்களான ரஷமோன்,ஸ்ப்ரிங் சம்மர் பால் விண்டர், போன்ற திரைப்படங்களின் வரிசையில் தமிழின் முதல் தத்துவார்த்த சினிமாவாக வெளிப்பட்டிருக்கிறது குற்றமே தண்டனை. ஒரு கொலையைத் தொடர்ந்து படத்தின் மையக் கதாபாத்திரம் எடுக்கும் அத்தனை முடிவுகளையும், அப்பாத்திரத்தையும், குறுக்கு விசாரணைக்குட்படுத்தி முடிவெடுக்கச் செய்யும் முழுபொறுப்பும் பார்வையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அரிய முயற்சியைக் கொண்ட இந்த அற்புத திரைப்படம், உலகசினிமா எனும் கலைப் படைப்புகளில் தமிழ் மொழி சார்பாக பிரவேசித்த அசுரப்பாய்ச்சல்.

தஸ்த்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் தலைப்பை சிறு மாறுதலுக்குட்படுத்திய அச்சிந்தனையே படத்தை தலை நிமிரச்செய்வதோடு. அந்த தலைப்பு மாறுதலைச் சமன் செய்திருக்கும் கதைப்புலமும், பாத்திர மனவேட்கைளும், அவற்றின் முடிவுகளும், சொல்லவந்ததைச் பொளீரெனச் சொன்ன படைப்பு நேர்த்தியும், என் பூரண திருப்திகரமான ஒரு படைப்பை தரிசித்த உணர்வை தந்ததிற்காக, ஏற்கனவே சிகரங்களில் உட்கார்ந்திருக்கும் சில (நாடக) இயக்குனர்களை கடாசித்தள்ளிவிட்டு கேள்வியெழுப்பும் பழமைவாதிகளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் இயக்குனர் மணிகண்டனை அங்கமர்த்தி விடலாம்.

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் மணிகண்டன் தந்த காக்காமுட்டை பூங்கொத்து எனில், குற்றமே தண்டனை ஒரு பூந்தோட்டம். இளையராஜாவின் இசை அந்தப் பூந்தோட்டத்தில் பொழிந்த சாரல் மழை.

No comments:

Post a Comment