Sunday, November 9, 2014

வெயில்

மழைக்காலத்தில்
வெயில் பற்றிய சிந்தனை 
எப்படி வந்ததென புரியவில்லை 
காலையில் தவறிவிழுந்து 

சிதிலமடைந்த முட்டையின்
மேலாக பெருங்குரலெடுத்து
கரைந்த காகத்தையும்
அம்முட்டையின் உயிர்க்குழம்பிருந்த
தடத்தையும் காணாது
தேடியபோது வந்திருக்கக்கூடும்
உண்மையில் வெயில்
மழையைப்போல
யாவையும் கழுவவிடுவதில்லை
இன்னும் ஆழமாக
கறை கூட்டி நினைவுறுத்துகிறது !!

No comments:

Post a Comment