Friday, May 16, 2014

காவி அரசியல்





உதிரம் ருசித்து பழகிய 
செந்நரி ஒன்று 
வாவ மூட்டில் மெதுவாக
உள் நுழைந்து 
வேட்டைக்கு காத்திருந்தது 
கவனித்த குழந்தை 
மெல்ல மெல்ல 
அருகில் சென்று 
தடவி பார்த்து 
தழுவி பார்த்து 
அந்நியம்
கலைந்து விளையாட 
தொடங்கியது 
இருவர் கண்களிலும் 
இன்னும் தட்டுப்படவில்லை
பிஞ்சு கழுத்தும் 
கோர பற்களும் !!

No comments:

Post a Comment