Sunday, January 12, 2014

ஒலிக்குறிப்பு





அடர்
வனாந்திரமொன்றில்
கூவிப்போன
பறவையின் குரலுக்கும்
பெருபணிக்காற்றில்
கிறீச்சிட்டு திறந்த
சாளரத்திற்கும்
கூடற்பொழுதில்
சரீரமெங்கும் வருடிய
வளையல்களுக்கும்
ஒரே ஸ்வரம் !!

No comments:

Post a Comment